மோடி அரசின் செயல்பாட்டை கண்டித்து வெளியேறுகிறாரா?
அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து திடீர் ஓய்வு
இந்திய டேபிள் டென்னிஸ் உல கின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான அர்ச்சனா காமத் (24) சர்வதேச டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக திடீரென அறி வித்துள்ளார். இந்த விவகாரம் இந்திய டேபிள் டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓய்வு குறித்து அர்ச்சனா காமத், “எனது சகோதரர் நாசாவில் பணியாற்றி வருகிறார். அவர் தான் எனது ரோல் மாடல். அதனால் படிப்பை தொடர முடிவு எடுத்துள்ளேன்’’ என அவர் கூறியுள்ளார்.
மோடி அரசின் செயல்பாடே காரணம்
24 வயதாகும் இளம் வீராங்கனை யான அர்ச்சனா காமத் சமீபத்தில் நிறைவு பெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் அசத்தலாக விளையாடினா லும், சின்னஞ் சிறிய சொதப்பல் காரண மாக அவரால் பதக்கம் வெல்ல முடிய வில்லை. அடுத்த சீசனில் கண்டிப்பாக அர்ச்சனா காமத் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என ஊடகங்களில் கட்டுரை யாக செய்திகள் வெளியாகின. ஆனால் திடீரென அர்ச்சனா காமத் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படிப்பு தொடர்பாக நான் ஓய்வு பெறு கிறேன் என அர்ச்சனா காமத் கூறினா லும், வளர்ந்து வரும் வீரர் - வீராங்கனை களுக்கு டேபிள் டென்னிஸில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என அவரின் பயிற்சியாளர் கார்க் கூறியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ஒன்றிய மோடி அரசு என்ற வார்த்தை பயன்படுத்தாமல் இளம் வீரர் - வீராங்கனைகளுக்கு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை ; அதனால் தான் அர்ச்சனா காமத் வெளியேறினார் என மறைமுகமாக பயிற்சியாளர் கார்க் குற்றம்சாட்டியுள்ளார்.
பணப் பிரச்சனை இல்லை
அர்ச்சனா காமத் ஓய்வுக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊட கங்கள் செய்தி தொகுப்பை வெளி யிட்டு வருகின்றன. ஆனால் உண்மை யில் இது தவறான தகவல் ஆகும். அர்ச்சனா காமத் வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றால் பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். இந்தியாவில் அர்ச்சனா காமத்திற்கு ஸ்பான்சர்ஷிப் பிரச்சனை எதுவும் இல்லை. மோடி அரசின் ஆதரவின்மையால் தான் அவர் வெளியேறியுள்ளார் என்பது தெளிவாக புரிந்துள்ளது.
திசை திரும்பிய வரலாறு
சர்வதேச விளையாட்டில் காலடி வைத்துவிட்டால் படிப்பை பற்றி எந்த வீரர் - வீராங்கனைகளும் கனவில் கூட நினைக்க மாட்டார்கள். காரணம் சர்வதேச விளையாட்டு மன உறுதியை வேறு திசைக்கு திருப்பி விடும். உலக சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை, ஒலிம்பிக் போன்ற போட்டிகளை மட்டுமே சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சர்வதேச விளையாட்டில் வெற்றிநடை கிடைக்காவிட்டால் தங்களது விளையாட்டுச் சார்ந்த துறைகளில் அகாடமி, பயிற்சி பள்ளிகளை துவங்கி விடுவார்கள். இதுதான் சர்வதேச விளையாட்டுக்கும், வீரர் - வீராங்கனைகளுக்கும் உள்ள இடைவெளி ஆகும். ஆனால் சர்வதேச விளையாட்டில் சூப்பர் பார்மில் உள்ள அர்ச்சனா காமத் திடீரென படிப்பை காரணம் காட்டி இளம் வயதில் ஓய்வு பெறுவது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியாட் விருதுகள் 2024 : சிறந்த கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் - வீரர்களுக்கான சியாட் (டயர் நிறுவனம்) விருதுகள் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழங்கப்பட்டது.
விருது வாங்கியவர்களின் பட்டியல்
சிறந்த சர்வதேச வீரர் - ரோகித் சர்மா
சிறந்த ஒருநாள் வீரர் - விராட் கோலி
சிறந்த டெஸ்ட் பேட்டர் - ஜெய்ஸ்வால்
சிறந்த டி-20 பேட்டர் - பில் சால்ட் (இங்கிலாந்து)
சிறந்த பந்துவீச்சாளர் (ஒருநாள்) - முகமது சமி
சிறந்த பந்துவீச்சாளர் (டெஸ்ட்)- அஸ்வின் (தமிழ்நாடு)
சிறந்த பந்துவீச்சாளர் (டி-20) - டிம் சவுத்தி (நியூஸி.,)
வாழ்நாள் சாதனையாளர் - ராகுல் டிராவிட்
உள்ளூர் கிரிக்கெட் சிறந்த பங்களிப்பு -
சாய் கிஷோர் (தமிழ்நாடு)
சிறந்த தலைமை பண்பு - ஸ்ரேயாஸ்(கொல்கத்தா கேப்டன்)
சிறந்த வீராங்கனை (பேட்டர்) - ஸ்மிருதி மந்தானா
சிறந்த வீராங்கனை (பந்துவீச்சு) - தீப்தி சர்மா