பல்வேறு அரசியல் புயல்களுக்கு மத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் தேவைக்கு- அதாவது தங்குதடையற்ற உழைப்பு சுரண்டலுக்கு ஏதுவாக தொழிலாளர்கள் சட்டங்களை தகவமைக்கும் பணியில் தனது வர்க்க கடமையை பாஜக/ஆர்எஸ்எஸ் அரசு செய்து கொண்டு இருக்கிறது.
நேற்று இரவு நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தோழர். சு.வெங்கடேசன் மற்றும் கேரளத்து இளமரம் கரீம் போன் செய்தனர். எந்த நேரத்திலும் புதிய "தொழில் உறவு மசோதா" வரலாம். அவர்கள் சந்தடி இன்றி நிறைவேற்ற எத்தணிக்கும் திட்டத்தை கூறினார்கள்.
பாராளுமன்றத்தில் நமக்கு மூன்று நிமிடங்கள் தான் கிடைக்கும். அதற்குள் நமது ஒட்டு மொத்த வர்க்கத்தின் ஏக்கத்தை எடுத்துரைக்க வேண்டும்..
அதற்கு ஏற்ப சிஐடியூ தோழர்கள் இதில் நமது பார்வையை வடித்தெடுத்து தாருங்கள் என்றார்கள்.
1970-களில் அப்போது இப்படி ஒரு மசோதா கொண்டு வரப்படும் போது நாடு முழுவதும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர். இப்போதும் அது நிகழ வேண்டும்.
உழைப்புக்கு மூலதனத்திற்குமான முரண்பாடே இன்றைய உலகின் மையமானது. அதை சுற்றியே அனைத்தும் கட்டமைக்கபடுகிறது.
வரலாற்று நாயகர்கள் உழைப்பாளிகளே...
ஆளும் வர்க்கம் உமக்கு எதிராக ஒவ்வொரு விநாடியும் யுத்த பிரகடனம் செய்கிறது. நீ...சும்மா ஒதுங்கி போகலாம் என நினைத்தாலும், அது விடாமல் உம்மை இழுக்கும்..
எழுந்து நில்..
எதிர் கொள்ள தயாராகு..
எதிர் காலம் வரலாற்று வழியில் உமக்கு மட்டுமே சொந்தம்.