election-2019

img

பூண்டி கே.கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாரூர், ஏப்.3-திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன் புதன்கிழமை திருவாரூர் ஒன்றியத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.மாங்குடியில் துவங்கிய வாக்கு சேகரிக்கும் பணி திருநெய்ப்பேர், கீழப்பனையூர், மேலபனையூர், தென்னவராயநல்லூர், வஞ்சியூர், வேப்பத்தாங்குடி, மாவூர், பின்னவாசல், கோமல், புதூர் மற்றும் உமாமகேஸ்வரபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆத்தூர், வடகரை, கொட்டாரக்குடி, கல்யாணமகாதேவி, பெருங்குடி, கீழப்படுகை, தப்பளாம்புலியூர், புதுப்பத்தூர் ஆகிய ஊர்களில் மக்களைச் சந்தித்து “உதய சூரியன் மற்றும்நாடாளுமன்ற தொகுதிக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்கு அளிக்கக் கோரி ஆதரவு திரட்டினார்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், சிபிஐ தலைவர்கள் பி.எஸ்.மாசிலாமணி, கே.எஸ்.புலிகேசி, திமுக ஒன்றியச் செயலாளர் புலிவலம்.ஏ.தேவா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

;