education

img

பி.இ. பொது கலந்தாய்வு நிறைவு: 54 விழுக்காடு நிரம்பவில்லை

சென்னை, ஜூலை 29- பொறியியல் படிப்புக்கான பொது கலந்  தாய்வுகளின் முடிவில் 90 ஆயிரத்து 737 இடங்கள் காலியாக உள்ளன. இது 54  விழுக்காடாகும். தமிழ்நாட்டில் 479 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இவற்றில் உள்ள மொத்த இடங்கள் ஒரு லட்சத்து 71 ஆயிரம். இதில்  பொதுப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக் கான கலந்தாய்வு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரிவுக்கான கலந்தாய்வில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 4 சுற்றுகளைக் கொண்ட இந்த கலந்  தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடைசி சுற்று ஞாயிறன்று (ஜூலை 28) நிறை வடைந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 4 பொது கலந்தாய்வுகளின் முடிவில் 76 ஆயிரத்து 364 இடங்கள் நிரம்பி உள்ளன. 90 ஆயிரத்து 737 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி 46 விழுக்காடு இடங்கள்  நிரம்பி இருக்கின்றன. 54 விழுக்காடு இடங்கள் நிரம்பவில்லை. மொத்தம் உள்ள  479 பொறியியல் கல்லூரிகளில், 2 சுய நிதி  கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகளில் மட்டுமே 100 விழுக்காடு இடங்கள் நிரம்பி  இருக்கின்றன.

157 கல்லூரிகளில் மட்டுமே 50 விழுக்காட்டுக்கு அதிகமான இடங்களும் 332 கல்லூரிகளில் 50 விழுக்காட்டுக்கு குறை வான இடங்களும் நிரம்பி இருக்கின்றன. 230 கல்லூரிகளில் 30 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 82 கல்லூரிகளில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. 44 கல்லூரிகளில் 5 விழுக் காட்டுக்கும் குறைவான இடங்கள்தான் நிரம்பி இருக்கின்றன. 16 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. கடந்த வருடம் மெக்கானிக் என்ஜினீய ரிங் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு இது கடும் சரிவை சந்தித்துள்ளது. இது போல் கட்டு மானப் பிரிவு, மின்னியல், உபகரணவி யல், விமான பொறியியல் மாணவர்களுக்  கான சேர்க்கையும் குறைந்திருக்கிறது. பி.இ. கணினி அறிவியல், மின்னணு  தொடர்பியல், பி.இ.தகவல் தொழில் நுட்பம் ஆகிய 3 பிரிவுகளிலும் மாணவர்கள்  சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த  வருடம் பி.இ. எந்திரவியல் பிரிவில் மாண வர் சேர்க்கை பெருமளவு குறைந்து விட்டது. எனவே 250க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த பிரிவில் பணிபுரியும் பேராசிரியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அறிவியல் பிரிவில் 110 கல்லூரிகளில் பொதுப்பிரிவு இடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. எனவே, மாணவர்கள் சேராத இந்த 110 கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.