education

img

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

சென்னை,ஜனவரி.22- தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்புமின்றி சஸ்பெண்ட் அல்லது திரும்பப் பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 2025-2026 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அங்கீகாரம் பெற ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.