economics

img

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக , இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணுசக்தி நிலையங்களை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது இதில் இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் (சுமார் ரூ. 6,630) என்ற நிலையை எட்டியுள்ளது.
ஏற்கனவே கச்சா எண்ணை விலை குறைந்த போதுகூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது