செங்கல்பட்டு,பிப்.7- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள பழைய பாலாறு மேம்பாலம் மூடப்பட்டு சீரமைக்கும் பணி தொடங்கப் ்பட்டுள் ளதால் இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள பாலாறு மேம்பாலம் ஒரு கிலோ மீட்டர் தூரம் பழுத டைந்து உள்ளது. இதில் 16 தூண்கள் உள்ள நிலையில் 16 தூண்களுக்கு இடையே உள்ள இணைப்பு ரப்பர் மற்றும் இரும்பு சட்டம் பழுதானதால் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், பாலத்தில் அதிர்வுகள் ஏற்பட்டு வந்தது. அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் சென்றதால் ஆய்வு செய்து 20 நாட்களுக்குள் சரிசெய்ய உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து, சீரமைப்பு பணியில் நெடுஞ் ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின் ்றனர். இந்த பராமரிப்பு பணிகளால், திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங் ்கள் புக்கத்துறை வழியாக நெல்வாய் கூட்ரோடு திருமுக்கூடல் வழியாக செங்கல் ்பட்டு மேம்பாலத்தை அடைந்து சென்னைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை யடுத்து, கனரக வாகனங்கள் மாமண்டூர் வழியாக சென்னைக்கு அனுமதிக்கப்பட வில்லை. இருவழி கொண்ட பாலம் ஒரு வழியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பாலத்தில் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.