districts

img

காவல் துறையில் தடம்பதித்த இரட்டையர்கள்

 செங்கல்பட்டு, மார்ச் 3- செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவருபவர் அரவிந்தன் ஐபிஎஸ். இவர் 2010 ஆண்டு ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்தவர்.  சிறந்த காவல் பணிக்கான தமிழக அரசின் அண்ணா விருதுபெற்றவர். இவரது சகோதரர் அபிநந்தன் டெல்லியில் காவல் துறை உதவி ஆணையராக பணி செய்து வருகின்றார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் புதனன்று (மார்ச் 2) அவரது டிவிட்டர்பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவு செய்திருந்தார். அந்த படத்தில் அவரது சகோதரர் அபிநந்தனுடன் இருவரும் காவல் சீருடையில் இருப்பது போல்  பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக போலீஸ் டெல்லி போலீஸை சந்தித்தபோது எனவும் கருத்து தெரிவித்தி ருந்தார். இருவரும் இரட்டையர்கள்  என்பதால் வித்தியாசம் தெரியாத அளவில் ஒன்றாக உள்ளனர். இதனால் இந்தப்படம் இணையத்தில் வைர லாக பரவி வருகின்றது.