செங்கல்பட்டு,ஜூன் 29- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூதூர் கிராமத்தில் இருளர் இன மக்கள் 11 குடும்பத்தினர் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இருளர் மக்கள் விவசாயம் செய்யும் நிலத்திற்கு அரு கில் உள்ள மற்ற சமூகத் தினருக்கு பட்டா வழங்கி யுள்ள நிலையில் இருளர் இன மக்களை மட்டும் அலை கழித்து வரும் மாவட்ட நிர்வா கத்தை கண்டித்து தொடர்ந்து மலைவாழ் மக்கள் சங்கம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுகுறித்து ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னர் மாநில ஆணையம் வழங்கியுள்ள உத்தரவு 251/2022 நாள் 18-07-2023 அடிப்படையில், மதுராந்த கம் வட்டம் பூதூர் கிரா மத்தில் ஐந்து தலைமுறை காலமாக பழங்குடி இருளர் மக்கள் பயிர்செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் நிலப்பட்டா உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது.
இந்த கோரிக்கை முன் வைத்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சங்கத் தின் நிறுவன தலைவர் பெ.சண்முகம், மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சங்கத்தின் தலைவர்களு டன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தை யில் ஜூன் 29ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பழங்குடி இருளர் மக்கள் பயிர் செய்யும் நிலங்களை நேரில் ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிவித்திருந் தார்.
இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாக ராஜன் தலைமையில் சனிக் கிழமையன்று (ஜூன் 29) வருவாய்த்துறையினர் பூதூர் கிராமத்தில் பழங்குடி இருளர் மக்கள் பயிர் செய்து வரும் நிலங்களை நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்த உடனடியாக ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப் படும் என மதுராந்தகம் வரு வாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.அழகேசன், சிபிஎம் மதுராந்தகம் வட்ட செயலா ளர் எஸ்.ராஜா, விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வாசுதேவன் மாவட்டத் துணைத் தலை வர் ஜி.மோகன் மற்றும் நிலத் தின் பயனாளிகள், அரசு வருவாய் துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.