செங்கல்பட்டு, ஏப் 25 – செங்கல்பட்டு மாவட்டத் தில் உள்ள கோவில் நிலங்க ளின் குடியிருப்போரை வாடகைதாரர்களாக மாற்றி உரிய அளவீடு செய்து நியாயமான வாட கையை அமல்படுத்திட வேண்டும் என அனைத்து சமய நிலங்களை பயன்படுத் துவோர் பாதுகாப்பு சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட முதல் மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு ஞாயி றன்று (ஏப் 24) சிங்கபெரு மாள்கோயிலில் மாவட்ட அமைப்பாளர் எஸ். குண சேகரன் தலைமையில் நடை பெற்றது. மாநாட்டை சங்கத் தின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் வ.செல்வம் துவக்கிவைத்து பேசினார். விவசாயசங்க மாவட்டச் செயலாளர் ஜி. மோகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கோவில் நிலத்தில் குடியிருப்போர் அனை வருக்கும் மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கிட வேண்டும், புதிய வாடகை நிர்ணயிக்கும் வரை அறநிலைய சட்ட பிரிவு 78, 79-ஐ பயன்படுத்தி வீடுகளை இடிப்பது, காலி செய்ய நோட்டீஸ் அனுப்புவது, கடைகளை பூட்டி சீல் வைப்பது போன்ற நடவடிக் கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக கோமதன், செய லாளராக எஸ்.குணசேகரன், பொருளாளராக எஸ்.அழகேசன் உள்ளிட்ட 19 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.