செங்கல்பட்டு,மார்ச் 13- அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக் கழக வளாகத்தில் திங்களன்று (மார்ச் 13) தொடங்கியது. இது வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் 26 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா போட்டி சுடரை ஏற்றி வைத்து போட்டியினை தொடங்கி வைத்து, பல்கலைக்கழகங் களிலிருந்து வருகை புரிந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பினைப் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், முதலமைச் சரும் விளையாட்டுத்துறை அமைச் சரும் சர்வதேச அளவில் விளை யாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற்றிடவேண்டும், தமிழ்நாடு மாணவர்கள், இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் நம்பிக்கையில் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் விளையாட்டில் வீரர், வீராங்கனைகளுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாநில இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்மையில் ஒடிசா மாநிலம் சென்று அங்குள்ள விளையாட்டு கட்ட மைப்புகளை பார்வையிட்டு, அந்த மாநில முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்களை சந்தித்து, விளையாட்டு மேம்பாடு தொடர்பாக இரு மாநிலங்களுக் கிடையே ஒப்பந்தம் செய்துள்ளார். முதலமைச்சர் அறிவுரையின்படி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு, தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறுகின்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்க ளுக்கான ஓய்வூதியம் வழங்குதல் போன்ற அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய அளவில் 82 பல்கலைக் கழகங்களைச் சார்ந்த 1,900 தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக 890 பயிற்சியாளர்கள் மற்றும் வீரர் களின் பெற்றோர்களும் வந்துள்ள னர். இந்தப் போட்டிகள் நடைபெறும் இந்த விளையாட்டு பல்கலைக்கழக மானது அனைத்து விளையாட்டு பயிற்சி வசதிகளும் கொண்ட ஆசிய அளவில் சிறந்த முதன்மை பல்கலைக்கழ கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித் தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் .ர.ராகுல் நாத் தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் மு. சுந்தர், காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற டாக்டர் ஆர்த்தி அருண், கபடி போட்டி யில் அர்ஜூனா விருது பெற்ற மணத்தி பி. கணேசன், அரசு அலுவலர் கள் மற்றும் விளையாட்டுத் துறை வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.