செங்கல்பட்டு, நவ. 24- 18 வயது பூர்த்தியாகும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் படிவம் 6-ஐ அளித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரி வித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் ஜனவரி 1 அன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்ப தற்கான படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழைகள், முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம் 8-ம் பூர்த்தி செய்து, தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் வருகின்ற டிசம்பர் 8-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் படிவங்கள் அளிக்கலாம். அதன் தொடர்பாக வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது, எனவே மேற்படி முகாமில் பொதுமக்கள் நேரில் சென்று படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடி யிருப்புக்கான ஆதார ஆவணங்களை நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தெரி வித்துள்ளார்.