districts

img

தொழுநோயாளிகள் ஆராய்ச்சி மையத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரிக்கை

செங்கல்பட்டு, ஜன.31- செங்கல்பட்டில் இயங்கிவரும் மத்திய தொழுநோயாளிகள் ஆராய்ச்சி மையத்தில் நோயாளி களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட திருமணி கிரா மத்தில் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழு நோயளிகள் இங்குத் தங்கி சிகிச்சை  பெற்று வருகின்றனர். இச்சூழ்நிலை யில் சிகிச்சையில் உள்ள நோயாளிக ளுக்கான அடிப்படை வசதிகளை நிர்வாகம் செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் சிறப்பு  நிலை மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது பணியில் உள்ள இயக்குநர் ஒத்துழைப்பு தராமல் இருந்து வருவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தற்போது தொழுநோயாளிகள் சுமார் 80 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்த நோயாளிகளை உறவினர்கள், நண்பர்கள் பார்க்க வரும்போது கொண்டு வரும் உணவு, பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை  நோயாளிகளுக்கு கொடுக்க இயக்குநர் அனுமதிப்பதில்லை. மேலும் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதால் நோயாளிகள் அடிமைகளை போல் நடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழுநோயாளிகளின் மன  அழுத்தத்திற்கு மருந்தாக நாட்டு  நடப்புகளை  தெரிந்து கொள்வதற்கு அனைத்து வார்டுகளிலும் செய்தித் தாள்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது செய்தித்தாள்கள் வழங்கப்படாமல் இதற்காக அரசு ஒதுக்கும் நிதியினை இயக்குநர் திரும்பி அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்ற நிலையில் இருப்பதால் நோயாளிகள் மேலும் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து நோயாளிகளுக்கும், ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் இயக்கு நர் இளவரசனைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் ஆராய்ச்சி மையத்தின் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழுநோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் எ.பிரகாசம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி  பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி,  வி.அரிகிருஷ்ணன்(மாற்றுத்திறனாளிகள் சங்கம்),க.புருஷோத்தமன்(வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பலர் பேசினர்.