districts

img

ரூ.6 கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு

செங்கல்பட்டு, மார்ச் 16- ரூ.6 கோடியில் கூடுவாஞ் சேரி ஏரி புனரமைக்கும் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா. மோ  அன்பரசன் துவங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம்,  கூடுவாஞ்சேரி நீர் வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கூடுவாஞ்சேரி ஏரிக்கு  பொத்தேரி, வல்லாஞ்சேரி, மற்றும் தைலாபுரம் ஆகிய  ஏரிகளின் உபரி நீர் வரு கின்றது. மேலும் ஏரிக்கு நீரா தாரமாக மழை நீரும் ஆதாரமாக விளங்கு கின்றது. இந்நிலையில் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரியின் கொள்ளளவை உயர்த்தி அமைக்கும் பணியை சிறு, குறு மற்றும் நடுத்தர துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்.