செங்கல்பட்டு, பிப்,28- புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேள னம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ் சேரி, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடம் வாக னம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகத்தில் சென்னை திருச்சி நெடுஞ் சாலைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 15 நிமிடம் சாலையின் இரு மார்க்கத் திலும் நடைபெற்ற போராட்டத்தால் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் தலைமை யிலான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்தனர். இதேபோன்று செங்கல் பட்டு, கூடுவாஞ்சேரி, படாளம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.