districts

img

குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்கிடுக விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, மார். 16- நூறுநாள் வேலையில் குறைந்த பட்ச  கூலியாக  ரூபாய் 600 வழங்கிட வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வியாழனன்று (மார்ச் 16)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட துணைத் தலைவர் பி.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1948 ஆம் ஆண்டு குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின் படி  வேளாண் தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபடும் விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டக்கூலியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தி  வழங்கிட வேண்டும்,  அதனடிப்படையில் உயர்த்தி வழங்கி, கேரளா அரசை போல, குறைந்தபட்ச சட்டக் கூலியாக ரூ.600 நிர்ணயம் செய்தும் அறிவித்திட வேண்டும். பல்வேறு சமூக நலத்திட்டங்களை உறுதிப் படுத்தும் விதமாக விவசாயத் தொழி லாளர்களின் நலன்களை பாதுகாக்க தனித்  துறையை உருவாக்கிட வேண்டும். நகர்புற வேலை திட்டத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தொடர்ச்சியாக. செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாவட்டப் பொருளாளர் சசிக்குமார், மாவட்ட  துணைச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர்  பேசினர். முன்னதாக சங்கத்தின் நிர்வாகி கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.