செங்கல்பட்டு, மே 19 – 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியி ருந்து வரும் நேதாஜி நகர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல் பட்டு மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு வருமாறு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் கிராமம், நேதாஜி நகர் பகுதியில் புல எண் 69 ல் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. இம்மக்கள் சிறு சிறு தொழில்கள் செய்தும், கூலி வேலை களுக்கு சென்றும் வாழ்ந்து வருகின்ற னர். இவர்களுக்கான வாழ்வாதாரம் வேறு ஏதும் இல்லாத சூழலில் இவ்விடத் தில் குடியிருந்து வருகின்றனர் . இவ்விடம் அரசு புறம்போக்கு அரசு மருத்துவக் கல்லூரி என வகைப்படுத் தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலத்தில் வசிக்கும் மக்கள் இது நாள் வரை அரசுக்கு வீட்டு வரி செலுத்தி வந்துள்ளனர். மேலும், மின் இணைப்பு, குடிநீர் குழாய். குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை பெற்றும் பயன் பெற்று வருகின்றனர். மேலும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் சாலை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் 22.04.2022 அன்று வருவாய் ஆய்வா ளர் மூலமும், 12.05.2022 அன்றைய தேதி யிட்டு வட்டாட்சியர் மூலமும் மேற்கண்ட நிலத்தை அனுமதியின்றி அனுபவித்து வருவதாக தெரிவித்து செங்கல்பட்டு பிர்கா வருவாய் ஆய்வாளர் 7 தினங்க ளுக்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இக்காலத்தில் நீர்நிலை உள்ளிட்ட ஆட்சேபகரமான நிலங்களில் வசிக்கும் மக்களை நீதிமன்ற உத்தரவை காட்டி யும், வருவாய்த்துறை மூலமும் குடி யிருப்புகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னுக்கு வந்துள் ளன. சமீபத்தில் சென்னையில் இது போன்று 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்துவரும் மக்களை ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக் கையின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தலையிட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன் பின்னணியில் 2022 மே 9 அன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையாற்றும்போது, “இனி வரக்கூடிய காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய நேரத்தில் முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்யக் கூடிய இடங்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் பிரதிநிதிகளோடு பேசி ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்துவோம் என்றும், அவர்க ளுக்கான புதிய இடத்தில்தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறு குடியமர்வு செய்யப்படுவார்கள்” என வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் இவ்வாறு கூறியுள்ள நிலையில் மாவட்ட வரு வாய்த்துறை வெண்பாக்கம் நேதாஜி நகர் பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கிறது. எனவே. நேதாஜி நகர் மக்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றாமல் அதே இடத்தில் வாழ்வதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தி பட்டா வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.