districts

img

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் குரங்குகள்  பிடிப்பு

மதுராந்தகம் ஜூலை 21- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் பேரூ ராட்சிக்குட்பட்ட வெங்கடேச புரம், இராவத்தநல்லூர், நேரு நகர், உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அச்சிறுபாக்கம்  பேரூராட்சிக்குட்பட்ட பொதுக்களின்ன் நலன் கருதி  வனத்துறை அதி காரிகள் உதவியுடன் நூற்றுக்கு மேற்பட்ட குரங்கு களை கூண்டு வைத்து  பிடித்து அடர்ந்த வனப்பகுதி யில் விடும் பணி மேற்கொள்ளப்பட்டது.