செங்கல்பட்டு, பிப். 6- செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனிதர்களின் சுய நினைவை இழக்க செய்யும் போதைப் பொரு ளான கஞ்சா சென்னை புறநகர் பகுதி யாக இருக்கும் செங்கல்பட்டு, மறை மலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்களை மையமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது காவலர்கள் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் தொடர் வண்டியை பயன்படுத்தி கஞ்சாவை நகருக்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மறைமலைநகர் காவல் நிலையத்திற்குட்படபட் கீழக்கரணை கிராமத்தில் சனியன்று (பிப் 5)இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்த கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த சைமன் ராஜ், கவுரிசங்கர், முத்துமணி சுமன், பிரவின், கார்த்தி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது சுமார் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்கும் கருவி, எடை இயந்திரம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். தென் மாவட்டங்களை சார்ந்த இவர்கள் தொழிற்சாலைகளில் பணி செய்து வரும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபர்களை கைது செய்த காவல்துறை யினர் சிறையில் அடைத்தனர். இதேபோன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா வியா பாரத்தில் ஈடுபட்டு வந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம், ஒரு கார், ஒரு மினி சரக்கு வேன் ஆகியவற்றை காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் ஆந்திரா, தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மொத்த மாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல், ஆந்திராவிலிருந்து செங்கல்பட்டிற்கு வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை காவலர்கள் சோதனை செய்தனர். அதில் தனி ரயில் பெட்டியில் இருந்த சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா 4 பைகளில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் இந்த பைகள் யாருடையது, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காஞ்சி புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் குறி வைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. இத னால் பல இளைஞர்களும், மாண வர்களும் தங்களின் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு கஞ்சா புகைப்ப தற்கு அடிமையாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கஞ்சா விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய உளவுத் துறை காவலர்கள்அந்த பணியை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள குற்ற நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உளவு சொல்லவேண்டிய காவலர்கள் தங்கள் பணியை செய்யாமல் அனை வரும் காவல் நிலையத்தில் அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் நிலை உள்ளது. இதனால் குற்ற நடவடிக்கைகள் கொடி கட்டி பறந்து வருகின்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன டியாக தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.