செங்கல்பட்டு,ஜன.7- குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ1 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று மாவட்டத் தலைவர் கி.கதிர் வேல் தலைமையில் செங்கல்பட்டில் நடை பெற்றது. மாவட்ட பொரு ளாளர் சு.பழனிசாமி வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் பேசினார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ந.பர்வதராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் மா.ச.முனுசாமி, ஆ.விஜய குமார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட செயலா ளர் மு.சீனிவாசன், அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட செயலா ளர் ப.பன்னீர் செல்வம், மத்திய ஓய்வூதியர் சங்க நிர்வாகி என்.அருணாசலம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிரபாகரன் பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், 70 வயது முதல் ஓய்வூதிய உயர்வை தேர்தல் வாக் குறுதியின்படி அளிக்க வேண்டும், ஓய்வூதியதாரர் களுக்கு வருமானவரியை ரத்து செய்ய வேண்டும், ரூ.80 லிருந்து ரூ.150 ஆக பிடித்தம் செய்த குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி அளிக்க வேண்டும், ரூ.150 ஆக பிடித்தம் செய்த மருத்துவ காப்பீட்டுத் தொகையை , ரூ.497 ஆக உயர்த்திய அளவுக்கு முழு மருத்துவ காப்பீடு அளிக்க வேண்டும், ரத்து செய்த ரயில் பயணக் கட்டண சலுகையை மீள வும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.