districts

img

திருடுபோன செல்போன்கள் ஒப்படைப்பு

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 2021- 2022ம் ஆண்டு  பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிடலாம். சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவேண்டும் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வி.பொன்ராமு, ஆதார்ஸ் பச்சாரா,  காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர்  தனசேகரன்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.