districts

img

தலித் மக்களுக்கான பட்டா இடத்தை மீட்கும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் !

செங்கல்பட்டு, ஜூலை 12- திருக்கழுக்குன்றம் வட்டம். நடுவக்கரை கிராமம் தலித் மக்களுக்கு தமிழக அரசால் 1980ல்  வழங்கிய நிபந்தனை பட்டா நிலம்  அடங்கல் கணக்கில் பதிவு செய்யாமல்  மாற்று சமூகத்தினர் அனுபவித்து வரும் நிலையில் அந்நிலங்களை மீட்டு எடுக்க வலியுறுத்தி விவசாயி கள் சங்கம் சார்பில் நிலம் மீட்கும் போராட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நடுவக்கரை கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட தலித் விவசாய குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு, கடந்த 1980ம் ஆண்டு சர்வே எண்,103ல் தலா 70 சென்ட் நிபந்தனை பட்டா நிலம் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  பட்டா நிலம் அடங்கலில் தரிசு என்ற உள்ளதாக கூறி கடந்த 2022ம் ஆண்டு வரு வாய்த்துறை சார்பில் அத்துமீறி யாரும் நிலத்தில் பிரவேசிக்ககூடாது என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதனால், உரிய  முறையில் விசாரணை மேற்கொண்டு  நிலத்தை தலித் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் உள்பட பல்வேறு துறை யினருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இந்த நிலத்தை மாற்று சமூகத்தினர் சிலர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த 30 பயனாளிகள் குடும்பங்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பமாக விரிவடைந்துள்ளனர் மேலும் உரிய நிலங்கள் ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற னர்.

இதனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஎம் சார்பில் நடுவக்கரை கிராம தலித் மக்களுடன் இணைந்து இந்நிலத்தை மீட்கும் போராட்டம், விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளர் பி.விஜயகாந்த் தலை மையில் வெள்ளியன்று (ஜூலை 12) நடைபெற்றது.

இதனால், அப்பகுதியில் பாது காப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், கிராம மக்கள் தமிழ்நாடு விவசாய சங்கத்துடன் இணைந்து ஊர்வலமாக நிலம் உள்ள பகுதிக்கு செல்ல முயன்றனர்.

இதையடுத்து, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராதா தலைமையிலான வருவாய்த்துறையினர், போராட்டத் தில் ஈடுபட்ட சங்கத் தலைவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் நிலத்தை இம்மாதம் இறுதிக்குள் அளவீடு செய்து கோப்புகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும். மேலும்,  தொடர் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, தற்காலிக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது

 இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டத் தலைவர் வி.அரி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வாசுதேவன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடுவக்கரை கிராமத் தில் துவங்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் கிளையின் சார்பில் பேருந்து நிறுத்தம் அருகே அமைக் கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.