districts

img

விரைவு பேருந்துகளுக்கு  கிளாம்பாக்கத்தில் நிறுத்தம்

செங்கல்பட்டு, அக். 21-  தீபாவளியையொட்டி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் நின்று செல்ல தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ,மதுரை, திருநெல்வேலி ,திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி  ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள்  வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில்  நின்று செல்லும் வகையில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும்  இப் பேருந்து நிறுத்தத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காவல் துறையின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கழிவறை, குடிதண்ணீர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெள்ளியன்று (அக்21) ஆய்வு செய்தார்.

;