districts

img

இளம்பெண் சுபஸ்ரீ  மரணத்திற்கு நீதி கேட்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மம் குறித்து உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தியும், இளம்பெண் சுபஸ்ரீ  மரணத்திற்கு நீதி கேட்டும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் க.ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயந்தி, நிர்வாகி வனிதா, வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மு.பிரியங்கா உள்ளிட்ட பலர் பேசினர்.