districts

img

32 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது

செங்கல்பட்டு, ஜூன் 24- மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. வெடால் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கடுக்கலூர், கடப்பாக்கம், தென்னேரிபட்டு, ஒத்திவிளாக்கம், வயலூர்  உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டை கொள்முதல் செய்யப் பட்டது. இதில் 32 ஆயிரம் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பப்பட்டன. மீதம் உள்ள 8 ஆயிரம் நெல்மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே போதிய பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழை யில் 8 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து  வீணாகி உள்ளது. பல மூட்டைகளில் உள்ள நெல்கள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் அனைத்து மூட்டைகளும் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே அரசு  நேரடி கொள்முதல் நிலையத்தில நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதி  இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
2 ஊழியர்கள் இடைநீக்கம்
செய்யூர் அருகே நெல்மூட்டைகளை சரியாக பராமரிக்காததால் 2 கொள்முதல்  நிலைய ஊழியர்களை மண்டல மேலா ளர் சத்யவதி இடைநீக்கம் செய்தார்.