districts

img

வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்

வேலூர், அக்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தான கழகத்தின் 30ஆம் ஆண்டு விழாவையொட்டி மாவட்டத் தலைவர் பெ.திலீபன் தலைமையில் வேலூரில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பார்த்திபன், ஏ.நாராயணன், செ.நா.ஜனார்த்தனன், செ.ஏகலைவன், ரத்த வங்கி மருத்துவர் தீபக், ரத்த வங்கி தொடர்பாளர் எஸ்.நந்தகுமார், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி வேதமுனி, முன்னாள் ரத்ததான கழக மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.