districts

img

நாட்டு நலப்பணியில் விஐடி மாணவர்கள்

வேலூர், மார்ச் 25- விஐடி  பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் பிரம்மபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா நடைபெற்றது . விழாவை தொடக்கி வைத்து  விஐடி வேந்தர் டாக்டர் கோ விசுவநாதன் பேசுகையில்,“ கல்வி கிடைத்தால் வீடும், நாடு முன்னேறும்” என்றார். விஐடி நடத்தி வரும்  அனைவருக்கும் உயர் கல்வித் திட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 7,000 பேர் பயன்பெற்றுள்ளன.  இதில் 66 விழுக்காடு பெண்கள்.  இதுவரை ரூ. 7 கோடி  இத்திட்டத்திற்கு செலவிடப் பட்டுள்ளது என்றும் கூறினார். இம் முகாமில் 22 மாநிலங்களை சேர்ந்த 280 மாணவர்களுடன் சீனா நாட்டின் மாணவர்கள் மூன்று பேரும் பங்கேற்றுள்ளனர். விழாவில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், மாணவர் நலன் இயக்குநர், பள்ளித் தலைமை ஆசிரியர் சிவ காமி, பிரம்மபுரம் ஊராட்சி  மன்றத் தலைவர் ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெங்கடேசன், ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சி லர் இலக்கியா சந்துரு ஆகி யோர் கலந்து கொண்டனர்.