வேலூர், ஜூலை 12- ‘அனைவர்க்கும் உயர்கல்வி’ அறக்கட்டளை மூலம் பொருளாதாரத் தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு வழங்க வும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உயர்கல்விக் கான மொத்த சேர்க்கை விகி தத்தை உயர்த்தப்படும் என்று அறக்கட்டளையின் தலைவரும், விஐடி-யின் வேந்தருமான முனைவர் கோ. விசுவநாதன் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றிய மேல்நிலைப் பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற, பொரு ளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி செல்லும் வாய்ப்பு வழங்க அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் ஆன்லைன் விண்ணப்பப்படிவம் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகை யில் அறக்கட்டளையின் இணைய தளத்திலிருந்து 13.7.2022 முதல் 22.7.2022 வரை தங்களின் விப ரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் மாணவர்கள் படித்த பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளின் சான்றொப்பம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்று நகல்களை இணைத்து, கல்லூரியில் சேர்ந்த ஒரு வார காலத்திற்குள் திட்ட ஒருங்கி ணைப்பாளர், அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, மருத்துவர் எம்ஜிஆர் ப்ளாக், விஐடி வளாகம், வேலூர்-632014, என்ற முகவரிக்கு நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். உயர்கல்வி உதவித் தொகைக் காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைப்பெறும். மேலும், அவர்களின் வீட்டிற்குச் சென்று குடும்ப பொருளாதார நிலையை அறிந்த பின்னரே உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு தொலைபேசி எண் 0416 - 2202196, 8428408872.