districts

img

வேலூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் – ஒருவர் கைது  

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையின் சுவரில் ஓட்டைபோட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  

வேலூர் - காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் தரைதள பக்கவாட்டுச் கடந்த 15 ஆம் தேதி இந்த கடையின் பின்புறத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேலூர் வடக்கு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கும்பலில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வேலூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(27) என்பவர் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட 9 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;