districts

img

திருப்பத்தூர்-ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகங்கள்: முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

திருப்பத்தூர், ஜூன் 5- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பத்தூர் தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான அலுவலகங்கள் தனியார் கட்டடங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.  இந்நிலையில், ரூ.109.71 கோடி மதிப்பில், 7 தளங்கள் கொண்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணி விரை வில் முடிந்து வரும் 2 ஆம் தேதி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார்.  இது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது. சி.என். அண்ணாதுரை எம்பி, சட்ட மன்ற உறுப்பினர்கள் க. தேவராஜி (ஜோலார்பேட்டை), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூர்), சி.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- வருகிற 20, 21 ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் அரசு மற்றும் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்குகிறார். புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்  பேட்டை மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகம் ரூ.118 கோடியில் 3 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 20 ஆம் தேதி இந்த அலு வலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். எனவே, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் வேலு தெரிவித்தார்.