வேலூர் மார்ச் 21 - தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் வேலூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு திமிரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சேட்டு மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார், மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி. சண்முகம் வாழ்த்துரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக விச மாவட்ட செயலாளர் ப.சக்திவேல், மாவட்ட தலை வர் எல்.சி.மணி கலந்து கொண்டனர். செய லாளர் வரதராஜன் வேலை அறிக்கையை யும், மாவட்ட துணை செயலாளர் ஜீவா தீர்மானங்களையும் வாசித்தனர். டிஎன்டிஏ குமார் நன்றி கூறினார். தீர்மானம் வேட்டைக்காரன் பழங்குடி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பாக பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கும் பேரணியை கோட்டைநோக்கி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்க ளில் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சார்பாக அரசு நலத்திட்டங்கள் வழங்க கோரி அளிக்கப்பட்ட மனுக்களை பரி சீலனை செய்யவேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார் . ராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக சின்னதுரை, செயலாளராக வரதராஜன், பொருளாளராக செந்தில்வேலன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.