districts

img

நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் எழுத்துப்போட்டி

வேலூர், ஜூன் 16 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியகம் இணைந்து வேலூர் சத்து வாச்சாரி வ.ஊ.சி.நகர் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு தமிழ் எழுத்துப் போட்டி நடத்தப்பட்டது.  

இதில் உயர்நிலை கல்விக்கு செல்லும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் 42பேர் பங்கேற்றனர். தமிழில் எழுத்தாற்றலை மேம்படுத்தும் வகையில் பிழையின்றி தெளிவாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்போட்டி நடத்தப்பட்டது. வேலூர் அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் ப.சேகர்,  தமிழாசிரியர் பாரதி, ஓவிய ஆசிரியர் செல்வ கனேஷ் ஆகியோர் எழுத்துப்போட்டியை ஒருங்கிணைத்தனர்.

பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சபிதா பாய்  தலைமையில் நடை பெற்ற பரிசளிப்பு  விழாவில் வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், அறிவியல் இயக்க செய லாளர் முத்து.சிலுப்பன் பங்கேற்று போட்டியில் பங்கேற்ற அனைத்து மாண வர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.

முதல் ஐந்து இடங்களில் தேர்வான மாணவர்களுக்கு புத்த கங்கள், எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிறைவாக பேசிய அறி வியல் இயக்க செயலாளர் முத்து சிலுப்பன் அறிவி யல் இயக்கத்தின் சார்பில் வாசிப்பு பயிற்சி மற்றும் எழுத்தாற்றலை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பல்வேறு வடி வங்களில் பயிற்சி மற்றும் போட்டிகளை இந்த ஆண்டு முழுவதும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.