வேலூர், பிப். 27- 30 ஏ.டி.எம். மையங்க ளில் ஒட்டும் பசையை தடவி நூதனமாக திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 40 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். வேலூர், காட்பாடி, காந்திநகர், திருவலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 30 ஏடிஎம் இயந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் இருந்த ஒட்டும் பசை காரணமாக பணம் எடுப்பவர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வந்தனர். மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒட்டும் பசையை தடவி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் காவல் துறையில் வங்கி மேலாளர் கள் புகார் அளித்தனர். இதை யடுத்து காவல் துறையினர் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலை யில் காட்பாடி ஓடை பிள்ளை யார் கோவில் அருகே ஏ.டி.எம். மையங்களில் நுழைந்த வாலிபரை போல் பைக்கில் ஒருவர் சந்தேகத்திற்கு இட மாக சென்று கொண்டி ருந்தார். அவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசா ரணையில் அவர் பெங்களூர் ஒயிட் கார்டன் பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (37) என்பது தெரியவந்தது. மேலும் வெவ்வேறு இடங்களில் 30 ஏ.டி.எம். மையங்களில் ஒட்டும் பசையை தடவி நூதனமாக திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைதான வாலிபர் ஏடி எம் இயந்திரத்தில் வாடிக்கை யாளர் இல்லாத நேரத்தில் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் பெவிகுவிக் பசையை தடவி விட்டு அங்கு அருகில் உள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் நடித்துக் கொண்டிருப்பார். அப்போது வாடிக்கை யாளர் ஏடிஎம் கார்டை எந்திரத்தில் நுழைத்து பணம் எடுக்க ரகசிய குறி யீட்டு எண்ணை பதிவு செய்வதை அருகில் இருந்து பார்த்து கொள்வார். வாடிக்கையாளர் பணம் எடுத்த உடன் ஏடிஎம் கார்டு எடுக்க முயலும் போது கார்டு இயந்திரத்தில் உள்ள பசை காரணமாக ஒட்டிக்கொள்ளும். கார்டை எடுக்க முடியாமல் வாடிக்கையாளர் வங்கி யில் புகார் அளிக்க சென்று விடுவார். இதை பயன் படுத்தி மர்ம நபர் கம்பி யின் மூலம் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வேறொரு ஏடிஎம் மையத்திற்கு சென்று ரகசிய எண்ணை போட்டு பணத்தை எடுத்துச் செல்வார். இதுபோல் 30 ஏடிஎம் மையங்களில் சுமார் 44 கார்டுகளை பயன்படுத்தி பல ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.