districts

img

ஜவ்வாது மலை மக்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரிக்கை

திருப்பத்தூர், ஜூன்.11 -  ஜவ்வாமலையில் பயிர் சாகுபடி செய்து வரும் மலைகிராம மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே உள்ள வழுதலம்பட்டில் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தின் 8 ஆவது மாவட்ட மாநாடு  சனிக்கிழமையன்று (ஜூன் 11) ஜெயராமன் தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் செயலாளர் ஜெயன் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர் காசி, சிஐடியு அமைப்பாளர் கேசவன், ரூபசந்திரன், கோவிந்தம்மாள், சென்னம்மாள் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 25 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் கவுரவத் தலைவராக லட்சுமணன்ராஜா, தலைவராக சந்திரன்,செயலாளராக ஜெயராமன்,பொருளாளராக லோ கநாதன்ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மலைவாழ் மக்கள் பயிர் செய்து வரும்  நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தடையில்லாமல் சாதிச் சான்று வழங்க வேண்டும். ஜவ்வாது மலையிலுள்ள 34 கிராமங்களில் விலாங்குப்பம், கொத்த னூர், செம்பரை, கல்லாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சாலை வசதி செய்துகொடுத்து, அரசுப் நகரப் பேருந்து இயக்க வேண்டும். ஜவ்வாது மலையில் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.