districts

துரைமுருகன் பேசும்போது மின்சாரம் துண்டிப்பு: 2 பேர் பணியிட மாற்றம்

வேலூர், செப். 13 - வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நிகழ்ச்சி திங்களன்று (செப், 12) நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும், மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்தனர். ஆனாலும் 10 நிமிடம் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விழாவை  பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார். இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு காட்பாடி, தாராபடவேடு பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய 2 பேரை காட்பாடி வடுகங்தாங்கள் துணை மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டார்.

;