districts

img

சேறும் சகதியுமான சாலை

வேலூர், அக். 7- வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. காந்தி நகர், விஜி ராவ் நகர், பாரதி நகர், ஓடை பிள்ளையார் கோவிலில் இருந்து செல்லும் மதி நகர், அருப்பு மேடு சாலைகள் பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாதவாறு படு மோசமாக சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சி யளிக்கிறது. ஒரு நாள் மழைக்கு கூட இந்த சாலைகள் தாங்கு வதில்லை. பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;