districts

img

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும்: விஸ்வநாதன்

வேலூர் ஏப் 29 - மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசினார். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 132ஆவது பிறந்த நாள் விழா வேலூர் விஐடி யில் தமிழியக்கம் சார்பில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசுகை யில், தமிழுக்காக வும் தமிழர்களுக்காகவும் பாடு பட்டவர் பாவேந்தர் பாரதி தாசன் என்றார். சாதி, மதம் கடந்து தமிழுக்கு தொண்டாற்றிய வர். தமிழை உயிர் என்று சொன்னவர். தமிழ் மொழி வளர்ச்சி பெறவும் பொரு ளாதார வளர்ச்சி பெறவும் முக்கியமாக இருப்பது கல்வி. எனவே கல்வியை எல்லொரும் பெற அதற்கான முயற்சியை நாம் எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு கல்வி அளிப்பதில் முக்கியத்து வம் அளிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் சமுதாயம், நாடு மற்றும் உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், ஏற்றத் தாழ்வுகளை களையவும் செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கு விக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

வைரமுத்து
கவிப்பேரரசு வைர முத்து பேசுகையில், தமிழின் வளர்ச்சிக்காகவும், மூடநம்பிக்கைகளை ஒழி க்கவும் அயராது பாடு பட்டவர் பாவேந்தர் பாரதி தாசன். 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாச் சாரத்தை கொண்டது நம்முடைய தமிழ் மொழி. எனவே நம்முடைய தமிழ் மொழியின் கலாச்சாரத்தை வளர்க்கவும் அதைப் பாது காக்கவும் நாம் அனைவரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்கள் அனைவரும் சாதி பெருமிதம் கொள்ளா மல், தமிழன் என்று பெரு மிதம் கொள்ள வேண்டும். வடநாட்டு திரைக்  கலைஞர்கள் இந்திதான் தேசிய மொழி என்று கூறுகிறார்கள். இந்தியா பல்வகை மொழி மற்றும் கலாச்சாரம் கொண்ட நாடாகும். எனவே இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்றார்.