districts

img

தமிழகத்திற்கு தனிக் கல்வி கொள்கை உருவாக்க திட்டம் உயர்கல்விதுறை அமைச்சர் க.பொன்முடி பேச்சு

வேலூர்,நவ.7-  வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவர்க ளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-  தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க பார்க்கி றார்கள். அதனை நாங்கள் எதிர்க்கி றோம். தமிழ் தாய் மொழி ஆங்கிலம் உலக தொடர்பு மொழி இந்த இரண்டு மொழிகள் நமக்கு போதும். விருப்ப ப்பட்டவர்கள் இந்தியை படிக்கலாம். ஆனால் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.  தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கையை உருவாக்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து  வருகிறார். அதற்கான தனி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் சுற்று சுவர் மற்றும் மைதானம் வசதி உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக செய்து தரப்ப டும்.  இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்த குமார், கார்த்திகேயன், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கல்லூரி கல்வி இணைஇயக்குனர் காவேரி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.