வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊனை கிராமத்தில், பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீடு உள்ளவர்களுக்கு மனைப் பட்டாக்களை வழங்கி பழங்குடியினருக்கு ரூ45 லட்சம் மதிப்பீட்டில் 15வீடுகள் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு. பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.