districts

img

100 வயதிலும் ஆர்வமாக வந்து வாக்களித்த மூதாட்டிகள்

வேலூர், பிப். 19 -   வேலூரில் 100 வயதி லும் ஆர்வமாக வந்து மூதாட்டிகள் வாக்களித்த னர். வேலூர்,  ராணிப் பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமையன்று (பிப்.19) நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்கா ளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரி சோதனை செய்த பின்னரே வாக்களிக்க அனு மதிக்கப்பட்டனர். தள்ளாத வயதிலும் மூதாட்டிகள் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் வந்து மூதாட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார். காகித பட்டறையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு ஊன்று கோலுடன் வந்து மூதாட்டி ஒருவர் வாக்க ளித்தார். அதேபோல் கண்ணமங்கலம் பேரூராட்சி யில் வாக்கு மையத்திற்கு 100 வயதுடைய மூதாட்டியை வாக்கு மையத்திற்கு தூக்கி கொண்டு வந்து வாக்களிக்க வைத்தனர். ராணிப்பேட்டை மாவ ட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாக்கு மையத்திற்கு வந்து ஆர்வமுடன் தனது வாக்கை பதிவு செய்தார். கர்ப்பிணிகளும் வரிசையில் காத்திருந்து வாக்க ளித்தனர். முதல் முறை யாக ஓட்டு போடும் இளம் வாக்காளர்களும் ஆர்வத்து டன் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.