வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ஒலக்காசி பகுதியில் அரசு மணல் குவாரி துவங்கக் கோரி பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு), மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலைவர் எஸ்.பங்கு மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குப்பு, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், நிர்வாகிகள் சி.சரவணன், பி.காத்தவராயன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், பி.குணசேகரன் (விவசாயத் தொழிலாளர் சங்கம்), விஜயன் ஆகியோர் பேசினர்.