வேலூர், மே 13- கடன் செயலிகளை செல்போனில் பதி விறக்கம் செய்ய வேண்டாம் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இணைய குற்றங்க ளால் ஏராளமான மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் இழந்த பணத்தை மீட்க வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளையில் பணத்தை பறிகொடுக்காமல் தடுப்பதற்கான விழிப் புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். காலத்திற்கு ஏற்றார்போல் மர்ம நபர்கள் புதுப்புது வடிவங்களில் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். தற்போது புதிதாக உருவெடுத்துள்ள இணையதள மோசடி குற்றங்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கூறியதாவது: வங்கியில் இருந்து பேசுவதாக மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி விவரங்களை பெற்று வங்கியில் உள்ள பணத்தை அபகரித்து வருகின்றனர். இது குறித்து மக்களுக்கு ஓரளவுக்கு விழிப் புணர்வு ஏற்பட்டதால் தற்போது புதுப்புது வடிவங்களில் கணினி மென்பொருள் தெரிந்த மர்ம நபர்கள் மக்களின் பணத்தை நொடியில் பறித்து விடுகின்றனர். இவர்களிடம் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது உடனடியாக கடன் வழங்கப் படும் என்ற ஆப்கள் (செயலி) பலவகை வந்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
ஆவணங்கள் இன்றி கடன் தருவதாக குறுந்தகவல் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். அதனுடன் ஒரு இணையதள செயலி லிங்கை யும் அனுப்பி வைப்பார்கள். அதை நம்பி நீங்கள் லிங்கில் சென்று செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தால் உடனே உங்கள் செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்த்து அதை திருடி வைத்துக் கொள்வார்கள். அவர்கள் வழங்கும் கடன் தொகையை நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்வார்கள். நீங்கள் செலுத்தத் தவறினால் உங்கள் செல்போனில் உள்ள எண்களுக்கு உங்களைப் பற்றித் தவறான குறுந்தகவல் அனுப்புவார்கள். உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவார்கள். பெற்ற கடனுக்கு பல மடங்கு வட்டியும் சேர்த்து அதிக தொகை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். எனவே இதுபோன்ற கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலும், பகுதி நேர வேலை பார்த்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று வரும் குறுந்தகவலையும் நம்பி ஏமாற வேண்டாம். அதை நம்பி செல்போனில் அவர்கள் அனுப்பும் ஆப்களை பதிவிறக்கம் செய்தால் உங்கள் விவரங்கள் திருடப்படும். பின்னர் உங்களை மிரட்டி பணம் பறிப்பார்கள். இது போன்ற நம்பகத்தன்மை இல்லாத செயலி களை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது. ஆன்லைனில் பல்வேறு நிறுவனங்க ளில் வாடிக்கையாளர் மைய எண்கள் போலியானதாக உள்ளது. எனவே ஆன்லை னில் வரும் நம்பகத்தன்மையற்ற வாடிக்கை யாளர் மைய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.