districts

img

300 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா வேலூர் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வேலூர், ஜூன் 30 - காட்பாடி அருகே மகிமண்ட லத்தில் 300 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். வேலூர் கோட்டை மைதா னத்தில் நடைபெற்ற அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு 62 கோடியே 10 லட்சத்தில் முடிவுற்ற 17 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 32 கோடியே 89 லட்சம் மதிப்பில் 50 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு துறை சார்பில் 30,423 பயனாளிகளுக்கு 360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் வேலூர் மாநகராட்சியில் 963 கோடியில் 52 பணிகள் தேர்வு செய்யப்  பட்டதில், 24 பணிகள் 334 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது”என்றார். பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேருராட்சியில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளும், பேர்ணாம்பட்டு சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வடுகங்தாங்கலில் 22 கோடி மதிப்பீட்டில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. 12 புதிய பால் உற்பதியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் 61 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி கிராமத்தில் தடுப்பணை, பாலாற்றின் குறுக்கே விரிஞ்சிபுரம் - கீழ்மொனகூர் பகுதியில் பாலாற்று வெள்ள சேதத்தை தடுக்க 7 கோடி யில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் மற்றும் குகையநல்லூர் கிராமத்தில் தடுப்பணை என 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். காட்பாடி மகிமண்டலத்தில் 300 ஏக்கரில் சிப்காட் தொழிற் பேட்டையும், மேல்மொணவூர், அப்துல்லாபுரத்தில் 5 ஏக்கரில் டைட்டில் பார்க் அமைக்கவும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குடியாத்தம் புறவழிச்சாலை 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு 228 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. வேலூர் வட்டச் சாலை 9 கிராமங்களை இணைக்கும் வகையில் 328 கோடியில் அமைக்க நில எடுப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வேலூர் புறவழிச்சாலை 13 கிராமங்கள் வழியாக சுமார் 220 கோடியில் அமைக்கப்படும். காங்கேய நல்லூரிலிருந்து சத்து வாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே 3.2 கி.மீ. தூரம் 120 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, எ.வ. வேலு, மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் பெ.குமார வேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலு விஜயன், குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.