தமுஎகச வேலூர் மாவட்ட குழு இந்தித் திணிப்பு எதிர்ப்பு - மொழியுரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம் வேலூர் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சகுவரதன் தலைமையில் நடைபெற்றது. சிகரம் செந்தில் நாதன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பெ.திலீபன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் க.திரிலோகசந்தர், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சுரேந்திரன், முல்லை வாசன் ஆகியோர் பேசினர்.