districts

img

100 நாள் வேலையில் 4 வாரமாக கூலியில்லை குடியாத்தத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

வேலூர், மார்ச் 12- குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு ஊராட்சிமன்றத்தில் நான்கு வாரமாக 100 நாள் வேலைக்கு கூலி வழங்காததைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மூங்கப்பட்டு ஊராட்சி மன்றத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் 750-க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக கூலி வழங்கப்படவில்லை.  எனவே, உடனடியாக கூலி வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.குணசேகரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  செ.ஏகலைவன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.குமாரி, எஸ்.வேண்டா, சிஐடியு நிர்வாகி கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.கோட்டீஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுத்தனர்.