districts

கூலி உயர்வு- போனஸ் கேட்டு ஆட்சியரிடம் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

இராஜபாளையம், ஜூன் 18- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் ஆவரம்பட்டி விசைத்தறி தொழிலா ளர்கள் கூலி உயர்வு மற்றும் பணி வழங்கக்கோரி இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் ஆவரம்பட்டி பகுதியில் 1000 விசைத்  தறி கூடங்கள் உள்ளன. இதில் ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் தொழிலாளர் களாக பணியாற்றி வருகின்றனர்.  விசைத் தறி கூட உரிமையாளர்கள் நூல் விலை உயர்வு குறித்து கடந்த 10 தினங்  கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அதன் தொடர்ச்சியாக விசைத்தறி கூடங்  களில் வேலை பார்க்கும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலி  உயர்வு, மற்றும் போனஸ், நிரந்தர வேலை வழங்க கோரியும் இரண்டு நாள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி தொழிலாளர்கள் மகா சபைக் கூட்டத்தில் தலைவர் கருப்பசாமி தலைமையில், துணை தலைவர் முரு கேசன் முன்னிலையில், செயலாளர் செல்வகுமார் வரவேற்றுப் பேசினார். துணைச் செயலாளர் குருநாதன், இணைச் செயலாளர் தேவி உள்பட பலர் கோரிக்  கைகளை விளக்கி பேசினர். விசைத்தறி உரிமையாளர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை முன்  பணமாக கொடுத்து தங்களை கொத்தடி மைகளாக வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் நிர்ணயித்த கூலி யையும் போனஸையும் மட்டுமே பெற்று வருவதாகவும் இதிலிருந்து விடுபட்டு உயர்ந்தபட்ச கூலி ஒப்பந்தம் போடவும் உயர்ந்தபட்ச போனஸ் வழங்க கோரி யும் கோரிக்கை விடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி  வைத்துள்ளனர். இதில் தீர்வு இல்லாத பட்சத்தில் தொடர் வேலைநிறுத்தம் உள் பட பல்வேறு போராட்டங்கள் நடத்த தீர்  மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.