districts

img

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேரை மே-12 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை மே-12 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரில் 22 வயது இளம்பெண்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  ஹரிஹரன்,ஜுனத்அகமது,மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையை  சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தினர். பின்னர் ஹரிகரன் உட்பட 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தனர்

இதற்கிடையே கடந்த 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர்படுத்திய போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் திங்களன்று நான்கு பேரும் திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதி கோபிநாத் 4 பேரையும் வருகிற மே மாதம் 2- தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.