districts

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து  

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பட்டுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில், பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான எஸ்பிடி பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.  

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 5 அறைகள் தரைமட்டமானது.

மேலும்,இந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் விக்னேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் படுகயாமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அம்மாபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.