districts

img

ஒருமையில் பேசும் அரசு கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் செயலரைக் கண்டித்து போராட்டம்

விருதுநகர், ஜூன் 15-  விருதுநகர் வட்டாட்சியர் மற்றும் ஊழியர்களை  ஒருமை யில் பேசிய அரசு கால்நடை பரா மரிப்புத்துறை கூடுதல் செயலர் தென்காசி ஜவஹரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரியாக இருந்து வரு பவர் தென்காசி ஜவஹர். இவர் சொந்த அலுவல் காரணமாக  விருதுநகர் பகுதிக்கு வந்துள் ளார். அப்போது, விருதுநகர்-மதுரை 4 வழிச்சாலையில் உள்ள  விருந்தினர் ஆய்வு மாளிகை யில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்  ளார். இதையடுத்து, அவரை உப சரிக்க விருதுநகர் வட்டாட்சியர் சென்றுள்ளதாகவும், அவரை யும், பிற ஊழியர்களையும், தென்  காசி ஜவஹர், ஒருமையில் பேசி யதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஊழி யர்கள் ஆய்வு மாளிகை முன்பு திரண்டனர். பின்பு, தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். நிர்வாகி பொன்ராஜ், வட் டாட்சியர்கள் செந்தில்வேல், ரம ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.