விருதுநகர், ஜூன் 9- விருதுநகர் சந்தையில் பாமாயில், மல்லி விலை உயர்ந்து காணப்பட்டது. சந்தைக்கு வரத்து அதிகரித்த கார ணத்தால் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற் றின் விலை சற்று குறைந்துள்ளது.
விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. அதன் விபரம்:
பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.1430 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. எனவே,ரூ.1435 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
மல்லி லயன் வகை 40 கிலோ கடந்த வாரம் ரூ.3300 முதல் 3600 வரை விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்துள் ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.3400 முதல் 3550 வரை விற்கப்படுகிறது.
குண்டூர் வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயி ரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ. 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படு கிறது.
துவரம் பருப்பு புதுசு நாடு வகையா னது கடந்த வாரம் 100 கிலோ ரூ.12500 என விற்கப்பட்ட நிலையில் சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 வரை குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.12 ஆயிரம் என விற்பனை யாகிறது.
தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,500 என விற்கப்பட் டது. இந்த வாரம் வரத்து அதிகரித்த காரணத்தால் குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்து மூட்டை ஒன்று ரூ.10,400 என விற்பனை செய்யப்படுகிறது.
பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,450 முதல் 10,500 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 குறைந்து, தற்போது ரூ.10,400 என விற்கப்படுகிறது.
உளுந்து லையன் வகை 100 கிலோ ரூ.10,500 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,400க்கு விற்கப்படுகிறது.
அதேவேளையில், பிற அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலை யில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.